லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கியவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தகவல் அறியும் சட்டத்தின் படி இந்தியாவில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய 123 அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ளது. இது வரை அது இந்த வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் துறை மற்றும் பதவிகளை மட்டுமே வெளியிட்டுவந்தது. இம்முறை லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களின் பெயர் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இது லஞ்ச ஒழிப்புத்துறையின் வலைப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கான பட்டியலில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கிய 101 அதிகாரிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 17 பேர் தேசிய வங்கிகளிலும், 13 பேர் Delhi Development Authority யிலும், 11 பேர் Municipal Corporation of Delhi யிலும் பணியாற்றுகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்ட 22 அதிகாரிகளில் 7 பேர் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுவோர், 4 பேர் IPS அதிகாரிகள், 7 பேர் Central Board of Direct Taxes துறையிலும், 2 பேர் இந்திய வனத்துறையிலும் பணியாற்றுகின்றனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறை 9 அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். இவர்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் New India Assurance Company Ltd லும், மேலும் ஒரு 11 பேர் ONGC யிலும் பணியாற்றுகின்றனர்.

நன்றி
NDTV

Posted by Wafiq on Friday, September 18, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கியவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner