புறக்கணிக்கப்பட்டார் வருண் காந்தி
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டார் வருண் காந்தி. மகாராஸ்டிரம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்காக பா.ஜ.க வின் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு பிரச்சாரகர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் சென்ற தேர்தலில் முஸ்லீம்கள் குறித்து வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புக் கருத்துக்களை வெளியிட்ட வருண் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மகாராஸ்டிரா மற்றும் ஹரியானாவில் நடக்க இருக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்துக்கொள்வார் என்று பா.ஜ.க வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.
வருண் காந்தியை புறம் தள்ளியது குறித்து பா.ஜ.க வின் துணை தலைவர் மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டதற்கு, "அந்த பட்டியல் கட்சியின் மாநில உறுப்பினர்களின் கருத்துகளை ஒத்தது என்று கூறினார். இதனால் கட்சிக்கு வேறு நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்று அர்த்தமில்லை, ஆனால் பட்டியலில் இல்லாதவர் யாரும் பிரசாரத்தில் ஈடுபட முடியாது" என்று தெரிவித்தார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

Posted by Wafiq
on Wednesday, September 30, 2009.
Filed under
இந்தியா
.
You can follow any responses to this entry through the
RSS 2.0