9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள்

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

மாஸ்கோ:
9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள் தோன்றின. ரசியாவின் டாகிஸ்தான் பகுதியில் உள்ள அலி என்ற 9 மாத குழந்தையின் உடம்பில் குரானிய வசனங்கள் தோன்றியிருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறினார்கள். இந்த குறிகள் அந்த குழந்தை பிறந்ததிலிருந்தே இருப்பதாக அவர்கள் கூறிகின்றனர்.


முதலில் தனித் தனி எழுத்துக்கள் தான் தோன்றின, பிறகு வசனங்கள் தோன்ற ஆரம்பித்ததாக அந்த பகுதியின் இமாம்கள் கூறினார்கள். இதனை வெஸ்ட் டிவி அறிவித்தது.

அந்த குழந்தை அலியின் ஒரு காலில் " யாவற்றையும் படைத்தவன் அல்லாஹ்" என்று எழுதியிருந்தது. இதைப்பற்றி அலியின் தாயார் மெதினா யாகுபோவா கூறுகையில், முதலில் அலியின் நாடியில் இரத்தக்கட்டு இருந்தது. பின்னர் அது மறைந்து அல்லா என்ற வார்த்தை தோன்றியது என்று கூறினார்.


இதைப் போன்ற வார்த்தைகள் அலியின் கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் திங்கள் மற்றும் வெள்ளியன்று தோன்றி பின்னர் மறைந்தன என்றும் அவர் கூறினார்.

புதிதாக வசனங்கள் தோன்றும் போது அலி இரவு முழுவதும் தூங்குவது இல்லை. அவனுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. மாத்திரைகளாலும் அது சரியாவதில்லை.


இந்த செய்தியை அறிவித்த செய்தி நிறுவனம் அந்த குழந்தைக்கு இச்செமிக் இதய நோயின் இரண்டாம் நிலை இருப்பதாகவும் infantile cerebral paralysis என்ற நோய் இருப்பதாகவும் கூறியது. நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அது கூறியது.

நன்றி
ABNA

Posted by Wafiq on Friday, October 16, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for 9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner