சத்யம் ராமலிங்க ராஜுவிற்கு சத்யமா நெஞ்சு வலி ?
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சத்யமின் நிறுவனர் ராமலிங்க ராஜுவிற்கு நெஞ்சு வலி. சிறையிலிருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமலிங்க ராஜு 8000 கோடி மோசடி செய்ததற்காக கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்தார், இவருக்கு தீவிர நெஞ்சு வலி வரவே இவரை சன்சல்குடா சிறையிலிருந்து NIMS மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். சிறை மருத்துவர்களால் பரிசோதிக்கப் பட்டு வந்த ராமலிங்க ராஜு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 7, 2009 வரை சத்யமின் தலைவராக இருந்தவர், தன மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஜனவரி 9 ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நன்றி
NDTV

Posted by Wafiq
on Tuesday, September 08, 2009.
Filed under
இந்தியா
.
You can follow any responses to this entry through the
RSS 2.0